மகிந்த ராஜபச்விடம் போலீசார் விசாரணை

261

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகுவதற்கு முன்னர், அவரது ஆதரவாளர்கள் கடந்த 9ம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக 2 எம்பிக்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் 5 மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.