கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணமா ? – சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் வருத்தம்

256
Advertisement

கொரோன இழப்பீடு சம்பந்தமான வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்து வருகிறது .அதில் கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் சமர்பிக்கப்படுவதாக வரும் தகவல் வருந்த செய்வதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள்,மனிதர்களின் ஒழுக்கம் இவ்வளவு தாழ்ந்து போகும் என எதிர்பார்க்கவில்லை என்றும் கொரோனா இழப்பீடு பெறுவதற்காக போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,மருத்துவர்களால் போலி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை எப்படி தடுப்பது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் ,இது ஒருவரின் உண்மையான வாய்ப்பைப் பறிக்கக்கூடும் என்று நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.