உத்தரபிரதேசம் மாநிலம் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25-வயது இளம்பெண்ணும், அவரது கணவரும் மருத்துவனைக்கு சென்றுள்ளனர். பின்னர் ரிக்ஷாவில் வீடு திரும்பிய போது, 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதையடுத்து 4 பேரும் சேர்ந்த அந்த பெண்ணின் கணவரை கடுமையாக தாக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனைத்தொடர்ந்து, துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை கணவர் கண்முன்னே சீரழித்தனர்.
இதுகுறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட உஸ்மான், இமாமுதீன், ரஷீத் மற்றும் ரியாசுப் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.