தாய், குழந்தை உயிரிழப்பு – கொலையா? தற்கொலையா?

261

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் கொத்தாளமுத்து – காயத்ரி தம்பதியினர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், காயத்ரியும், அவருடைய 4 மாத ஆண்குழந்தையும் வீட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இதனை  கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இருவரின்  உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கொலையா? அல்லது  தற்கொலை?  என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.